• Welcome to TamilsGuide
செய்திகள் 1

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இலங்கை

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பதுளை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்தோடு வடக்கு – கிழக்கு மற்றும் ஊவா மாகணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் இன்று சிறிதளவு மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் இன்று பிற்பகல் 4 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
 

Leave a Reply