• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம்

சினிமா

மன்னார் மாவட்டத்தின், நானாட்டான் பிரதேசத்திலுள்ள காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு கோரி,  இன்று பொதுமக்களால் கவனயீர்ப்புப்  போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொம்பன் சாய்ந்த குளம் பகுதியில் உள்ள 46 ஏக்கர்  காணியை 113 குடும்பங்களுக்கு  பகிர்ந்தளிக்குமாறு கோரியே, இசைமாளத்தாழ்வு கிராம மக்களினால் குறித்த  கவனயீர்ப்புப் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் இந்த விடயத்தில் தலையிடவேண்டும் என வலியுறுத்திய போராட்டக்காரர்கள், போராட்டத்தின் பின்னர்  பல கோரிக்கைகள்  அடங்கிய மகஜர் ஒன்றையும் உதவி மாவட்ட செயலாளர், உதவி பிரதேச செயலாளர், மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் ஆகியோருக்கு  கையளித்துள்ளனர்.
 

Leave a Reply