• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காதல் விவகாரத்தால் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு

இலங்கை

கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தி மீனவ கிராமப் பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காதல் விவகாரம் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்படுகிறது.

நேற்று (30) இரவு இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும், காயமடைந்த நபர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர் பவத்தமடுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தற்போது அப்பகுதியை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply