• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுதந்திரதின ஒத்திகையில் விபத்து - நான்கு பாதுகாப்புப் படையினர் காயம்

இலங்கை

சுதந்திரதின ஒத்திகையில் பங்கேற்ற பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திரதின ஒத்திகையின்போது இடம்பெற்ற பெரசூட் விபத்திலேயே குறித்த நால்வரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரசூட் ஒத்திகையின் போது வானத்தில் இரண்டு பெரசூட்கள் மோதி விபத்துக்குள்ளானதாகவும், விபத்தில் விமானப்படையின் இரண்டு பெரசூட் வீரர்களும், இராணுவத்தின் இரண்டு பெரசூட் வீரர்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 

Leave a Reply