• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அருட்கவி ஞானகணேசன் அவர்களது  நினைவேந்தல் நிகழ்ச்சி

கனடா

கனடாத் தமிழ்க் கவிஞர் கழகத்தினால் நடத்தப் பெற்ற அருட்கவி ஞானகணேசன் அவர்களது  நினைவேந்தல் நிகழ்ச்சியில் தயாளன் பிரதீப்பினால் எடுக்கப் பெற்ற புகைப்படங்கள் பகிர்ப் பெற்றுள்ளது.  

அருட்கவி ஞானகணேசன் கனடாக் கவிஞர் கழகத்தில் பல பொறுப்புகளை ஏற்றுத் திறம்பட நடத்தியிருந்தார்.  அத்துடன் பல மரபுக்கவிதை மாணவர்கள் உருவாக வழிவகுத்துள்ளார்.  அவரை நினைவுகூர்ந்து மரபுக் கவிதைகளை எழுதி வந்து படித்து நினைவேந்தல் நிகழ்ச்சிகளைச் சிறப்பித்தார்கள்.  

கனடாத் தமிழ்க் கவிஞர்கழகத்தினால் நடத்தப்பெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் அருட்கவி ஞானகணேசன் அவர்களது குடும்பத்தினர் உறவினர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் கனடாத் தமிழ்க் கவிஞர் கழக நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

Leave a Reply