• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடந்த 24 மணிநேரத்தில் 836 பேர் கைது

இலங்கை

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 836 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 142 கிராம் ஹெரோயின், 95 கிராம் ஐஸ் மற்றும் 1,650 போதை மாத்திரைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 6 பேரை தடுப்புக் காவலில் வைக்குமாறும் ஒருவரை புனர்வாழ்வு மத்திய நிலையத்துக்கு அனுப்புமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

Leave a Reply