• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கெரட்டை தொடர்ந்து தக்காளியின் விலையிலும் அதிகரிப்பு

இலங்கை

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 800 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் நுவரெலியா தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி பயிர் அழிந்து போனதால், பசுமைக்குடில் பயிரிடப்பட்ட மரக்கறி பயிர்கள் மட்டுமே இந்நாட்களில் சந்தைக்கு வருகிறது.

இதன் காரணமாக ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 800 ரூபாயாக அதிகரித்துள்ளது.

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கேரட்டின் மொத்த விலை 1,350 ரூபாவாகவும், ஒரு கிலோ கறி மிளகாயின் மொத்த விற்பனை விலை 700 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

மேலும் இன்றைய நாட்களில் ஒரு கிலோ ப்ரோக்கோலியின் மொத்த விலை 4100 ரூபாயாக அதிகரித்துள்ளது.

வயல்களில் பயிர்கள் அழிந்து வருவதால் பசுமைக்குடில்களில் விளையும் காய்கறிகளின் தேவை வெகுவாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply