• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பெலியத்தை படுகொலை சம்பவம்- மேலும் ஒருவர் கைது

இலங்கை

கடந்த வாரம் பெலியத்தை பகுதியில் ஐந்து பேர் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம்  மேலும் ஒருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 30 வயதானவர் எனவும்,  ரத்கம பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் இது குறித்த விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply