• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாரம்மலயில் விபத்து - மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

இலங்கை

நாரம்மல – கிரியுல்ல பிரதான வீதியில் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (27) காலை முச்சக்கர வண்டியொன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த மூவரும் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள். விபத்தின் போது முச்சக்கரவண்டியில் நான்கு பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
 

Leave a Reply