• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மகாவலி வலயங்களை ஊக்குவிப்பதன் மூலம் உணவுப் பாதுகாப்பு - ஜனாதிபதி

இலங்கை

இனிப்புப் பண்டத் தொழில்துறையை முன்னணி ஏற்றுமதித் துறையாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்

கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற இலங்கை இனிப்புப் பண்ட உற்பத்தியாளர் சங்கத்தின் 30 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது இனிப்புப் பண்டத் தொழில்துறையினூடாக தேசிய பொருளாதாரத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, நாட்டில் உள்ள எட்டு முன்னணி இனிப்புப் பண்ட உற்பத்தியாளர்களுக்கு ஜனாதிபதியினால் விருதுகளும் வழங்கி வழங்கப்பட்டிருந்தது

இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, சிலாபம் மற்றும் குருநாகல் பிரதேசங்களில் உள்ள தோட்டங்களுக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும், ஜனதா தோட்ட அபிவிருத்திச் சபை, அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எல்கடுவ உள்ளிட்ட ஏனைய காணிகளையும் இனிப்புப்பட்ட தொழிற்துறையின் அபிவிருத்திக்காக பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்படும் என தெரிவித்தார்.

இதுவரை பயன்படுத்தப்படாத மகாவலி ஏ மற்றும் பி வலயங்களில் பயிர்ச்செய்கையையை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டில் உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், தென்னை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றையும் நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஆராய்ச்சித் துறைக்காக சுமார் 8 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply