• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரஜினி படங்களில் இருந்து விலகிய நளினி

சினிமா

ஏன்னே தெரியல... அவர் படத்தில் நடிக்க பிடிக்கல! ரஜினி படங்களில் இருந்து விலகிய நளினி

தனது ஸ்டைல் மற்றும் விடா முயற்சியின் காரணமாக தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி வைத்துள்ள ரஜினிகாந்த், இதுவரை 169 படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்துடன் சில படங்களில் இணைந்து நடித்து பிரச்சனை காரணமாக பாதியில் விலகிவிட்டதாக பழம்பெரும் நடிகை நளினி கூறியுள்ள தகவல் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்தில் நடத்துனராக பணியாற்றி சினிமாவின் மீதுள்ள மோகத்தினால் திரைப்பட கல்லூரியில் சேர்ந்த ரஜினிகாந்த், அதனைத் தொடர்ந்து கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் வில்லன் மற்றும் முக்கிய கேரக்டரில் நடித்த ரஜினிகாந்த் பைரவி படத்தின் மூலம் தனி ஹீரோவாக அறிமுகமானார்.

அதன்பிறகு தனது ஸ்டைல் மற்றும் விடா முயற்சியின் காரணமாக தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி வைத்துள்ள ரஜினிகாந்த், இதுவரை 169 படங்களில் நடித்துள்ளார். இப்போதும் அவரது சினிமா வாழ்க்கை உச்சத்தில் இருந்தாலும், தொடக்கத்தில் பல போராட்டங்களை சந்தித்து தான் சிவாஜி ராவ் ரஜினிகாந்தாக மாறியுள்ளார். சினிமாவில் தனது போராட்டம் குறித்து அவரே பல மேடைகளில் கூறியுள்ளார்.

இதனிடையே நடிகை நளினி சமீபத்திய பேட்டியில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில், "ரஜினிகாந்த்துடன் ஒரு படத்தில்கூட நான் நடித்ததில்லை. ஆனாலும் மாவீரன், தங்கமகன், கை கொடுக்கும் கை, தம்பிக்கு எந்த ஊரு உள்ளிட்ட படங்களில் முதலில் நான் நடித்தேன். ஆனால் ஏனோ தெரியவில்லை எனக்கு பிடிக்கவில்லை அதனால் பாதியில் விலகிவிட்டேன். அதுமட்டுமில்லாமல் நான் ஒரு பைத்தியம்" என ஜாலியாக தெரிவித்துள்ளார்.

நளியினின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதனைப் பார்த்த ரசிகர்கள் தலைவரோடு நடிப்பதில் அப்படி என்னதான் மேடம் உங்களுக்கு பிரச்னை இருந்தது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

Leave a Reply