• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடமராட்சி கிழக்கில் விபத்து - இருவர் படுகாயம்

இலங்கை

வடமராட்சி, கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சி, கிழக்கு வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், மருதங்கேணியில் இருந்து கட்டைக்காடு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் இருவர் பலத்த காயங்களுடன் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருசில நாட்களுக்கு முன்பு இராணுவ உழவு இயந்திரத்துடன் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்த அதே இடத்தில் இந்த விபத்தும் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply