• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிறுவனுக்கு எமனான இறப்பர் பட்டி

இலங்கை

இறப்பர் பட்டி கழுத்தில் இறுகியதில் சிறுவனொருவன் உயிரிழந்த சம்பவம் கலவான, பொத்துபிட்டி, பனாபொல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

ஒன்பது வயதான குறித்த சிறுவன்   நேற்று முன்தினம்  (13) வீட்டில் இருந்த கல் உடைப்பதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு கம்பியொன்றில் இறப்பர் பட்டியை கட்டி விளையாடியுள்ள நிலையில், எதிர்பாராத விதமாக குறித்த  இரும்புக்  கம்பி தலையில் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த சிறுவன் சுமார் அரை மணித்தியாலத்துக்கும் மேலாக முற்றத்தில்  சுயநினைவின்றி கிடந்துள்ள நிலையில் மற்றுமொரு சிறுவன் இதனைக்கண்டு அவரது பெற்றோருக்கு அறிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து ஆபத்தான நிலையில் பொத்துபிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன்,  மேலதிக சிகிச்சைக்காக கலவான வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் பெற்றோரின் அலட்சியமே குறித்த உயிரிழப்புக்கு காரணம் எனத் தெரிவித்த பொலிஸார்  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply