• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையின் இரத்தினங்களுக்காக வலைவிரிக்கும் வல்லரசுகள் 

இலங்கை

சர்வதேச இரத்தினக்கல் ஆய்வு மையம் ஒன்றினை முதன் முறையாக இலங்கையில் ஸ்தாபிக்கவுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சங்கத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெந்தோட்டையில் இடம்பெற்ற இரத்தினக்கல் கண்காட்சியின் போதே நேற்றைய தினம் (13) இந்த விடயம் தொடர்பாக அறிவிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

அமெரிக்க மற்றும் சீன நிறுவனங்களின் இணை முதலீட்டின் கீழ் இந்த ஆய்வு மையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் நிர்மாணப் பணிகளுக்கான ஆரம்ப முதலீடாக சுமார் 10 லட்சம் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் முதன் முதலாக நிர்மாணிக்கப்படவுள்ள இந்த ஆய்வு மையமானது பேருவளையில் அமையவுள்ளது.

பேருவளையில், சைனாபோட் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை இரத்தினக்கல் கண்காட்சியின் போது இந்த விடயம் தொடர்பாக அறிவிக்கப்பட்டது.

இந்த கண்காட்சியை காண்பதற்காக பல வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளுர் இரத்தினக்கல் ஏற்றுமதி நிறுவனங்கள் பங்குகொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உத்தேச சர்வதேச இரத்தினக்கல் ஆய்வு மையம் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
 

Leave a Reply