• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முறிகண்டி பகுதியில் விபத்து

இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த விபத்து நேற்று முறிகண்டி பொலிஸ் காவலரணுக்கு அண்மித்து A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

அதன்படி பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக பேருந்து தரிப்பிடத்தில் தரித்துள்ளது .அதேசமயம் அதே திசையில் பயணித்த ரிப்பர் வாகனம் பேருந்தின் பின்னால் மோதியதால் இந்த விபத்து ஏற்ட்டுள்ளது.

சம்பவத்தில் காயங்களுக்குள்ளான பயணிகள் மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் விபத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பொலிசார் சீர் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply