• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெள்ளத்தால் முக்கிய வீதிக்குப் பூட்டு

இலங்கை

பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதி வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதால்  மன்னம்பிட்டி- கல்லெல்ல  வீதி மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தொடர் மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதோடு,  மாணிக்க கங்கையும் நிரம்பி வழிவதாகவும், இதனால்  யால பூங்காவின் திஸ்ஸமஹாராம, பலட்டுபான பிரதான நுழைவாயிலை மறு அறிவித்தல் வரும் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply