• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெள்ளவத்தையில் மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்த பெண் 

இலங்கை

வெள்ளவத்தை பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பொன்றில் இருந்து கீழே குதித்து, பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

49 வயதான, ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு  உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் கணவர் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சென்றுள்ள நிலையிலேயே, வீட்டில் இருந்த கதிரையினைப் பயன்படுத்தி 8வது மாடியில் இருந்து  குதித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்காகச்  சிகிச்சை பெற்று வந்துள்ளார் எனவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply