• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து சேகரிப்பு

இலங்கை

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து பெறும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். நல்லை ஆதீனத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் சமய தலைவர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்துப் பிரதிகளை வடக்கிற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதிக்கு நேரில் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply