• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உயர்தர பரீட்சை அட்டவணையில் புதிய மாற்றம்

இலங்கை

2023 ஆண்டுக்கான உயர்தர பரீட்சைகள்  நாளை (04) ஆரம்பமாகவுள்ளன. இந்நிலையில் உயர்தர பரீட்சை அட்டவணையில் புதிய மாற்றமொன்று செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து மாணவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும்  பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விண்ணப்பதாரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது” இம் முறை  புதிய பாடமாக கொரிய மொழி சேர்க்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக அட்டவணையில் சில சிறிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, பழைய அட்டவணையைப் பயன்படுத்த வேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில் சில வலைத்தளங்கள் பழைய அட்டவணையைக் காட்டக்கூடும். பரீட்சாத்திகளின் வசதிக்காக இந்த அட்டவணையை அனுமதிச்சீட்டிலேயே காட்டியுள்ளோம். அதனால் வேறு எந்த தகவலுக்கும் செல்லத்  தேவையில்லை.

உங்கள் அனுமதிச்சீட்டு கிடைக்கும் போது முன்பதிவு பிரிவு உள்ளது. அந்த பகுதியில் திகதி, பாட எண், மொழி, நீங்கள் விண்ணப்பித்த பாடங்கள் தொடர்பான பாடத்தின் நேரம்  என்பன உள்ளன” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply