புத்தாண்டு பிறப்பு - தீபங்களால் ஜொலித்த நல்லூர் கந்தன்
இலங்கை
2024 ஆங்கிலப் புத்தாண்டடை வரவேற்கும் முகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நேற்று நள்ளிரவு 12.00 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டன. 2024 ஆம் ஆண்டு அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் ஏற்படும் வகையில் அமைய வேண்டும் என பிரார்த்திக்கும் வகையில் தீபங்கள் ஏற்றப்பட்டு ஒளியூட்டப்பட்டன. அதேவேளை கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.