• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில்

இலங்கை

புது வருடத்தில் நான்கு நாள் பயணமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதற்கமைய ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் சந்திப்புக்களையும் மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதியின் வட மாகாண விஜயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

எதிர்வரும் 4 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி மாலை 3 மணி முதல் 5.30 வரை மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்ளவுள்ளார்.

அன்று மாலை 7 மணி முதல் 9.30 வரை சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.

5 ஆம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும், மாலை 2 மணி தொடக்கம் 3 மணி வரையில் பூநகரிப் பிரதேச அபிவிருத்தி மற்றும் நகர மயமாக்கல் தொடர்பில் பூநகரிப் பிரதேச செயலகத்தில் இடம்பெறும் கலந்துரையாடலிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

6 ஆம் திகதி காலை 9 மணி முதல் 10 மணி வரையில் யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணம், வவுனியா பல்கலைக்கழக உப வேந்தர்கள் மற்றும் கிளிநொச்சி வளாகப் பீடாதிபதி உள்ளிட்ட விரவுரையாளர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து 10 மணிமுதல் 11.30 வரையில் சர்வமதப் பிரதிநிதிகள், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் நலன்புரிச் சங்சத்தின் பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்திக்க இருக்கின்றார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை யாழ். மாவட்ட செயலகத்தில் நிபுணர்களுடனான சந்திப்பும், 7 ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் பனை தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான சந்திப்பையும் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply