• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரித்தானிய தம்பதிக்கு லொட்டரியால் அடித்த அதிர்ஷ்டம் 

சினிமா

வட அயர்லாந்தில் வாழும் ஒரு தம்பதியருக்கு லொட்டரில் பெரும் தொகை ஒன்று பரிசாக கிடைத்துள்ள நிலையில், தங்களுக்கு அவ்வளவு பெரிய தொகை கிடைத்துள்ளதை தங்களால் நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளார்கள் அவர்கள்.

வட அயர்லாந்திலுள்ள Fermanagh என்னுமிடத்தில் குடும்பத்துடன் வாழும் தம்பதியர் ஜானி (Jonny Johnston) மற்றும் கிறிஸ்டினா (Christina Williams). தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒருவாரம் முன்பு பணியிலிருந்திருக்கிறார் டெஸ்கோவில் டெலிவரிமேனாக வேலை செய்யும் ஜானி.

அப்போது, அவருக்கு மொபைலில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. உங்களுக்கு லொட்டரி மூலம் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது என்று கூறியுள்ளது அந்த செய்தி.

மறுநாள் காலை தனது மொபைலைப் பார்த்த ஜானி, தனக்கு லொட்டரியில் பரிசு விழுந்துள்ளதைக் கவனித்துள்ளார். 38,000 டொலர்கள் தனக்கு கிடைத்துள்ளதாக முதலில் நினைத்த ஜானி, பின்னர் பூஜ்யங்கள் அதிகமாக இருக்கவே, கணக்கராக பணியாற்றும் தனது மனைவியை எவ்வளவு பரிசு கிடைத்துள்ளது என்று பார்க்கச் சொல்லியிருக்கிறார்.

என்றாலும், லொட்டரி நிறுவனத்திடமிருந்து செய்தி வந்தபிறகே தங்களுக்கு 3.8 மில்லியன் பவுண்டுகள் பரிசு கிடைத்துள்ளதை நம்பியிருக்கிறார்கள் தம்பதியர்.

இதுவரை தம்பதியர் எந்த வெளிநாட்டுக்கும் குடும்பமாக சுற்றுலா சென்றதில்லையாம். ஆகவே, கப்பல் ஒன்றில் கரீபியன் நாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுவருகிறார்கள் ஜானி, கிறிஸ்டினா தம்பதியர்.

அத்துடன், பிள்ளைகளில் ஒருவருக்கு ஒரு கார் மற்றும் ஒரு ட்ராக்டர் வாங்கிக் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார்கள் தம்பதியர்.

இருந்தாலும், இரண்டு பேருக்குமே வேலையை விடும் திட்டம் இல்லையாம். வேலை செய்வது நம்மை பிஸியாக வைத்திருக்க உதவுவதுடன், வாழ்வில் ஒரு அர்த்தம் உள்ளதையும் உறுதிசெய்கிறது என்கிறார்கள் அவர்கள்.
 

Leave a Reply