• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உக்ரைன் கிவ் நகரில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் ரஷியா டிரோன் தாக்குதல்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கி 2 ஆண்டுகளை நெருங்கிவிட்டது. ஆனாலும் இன்னும் சண்டை ஓய்ந்த பாடில்லை. ரஷிய படைகள் தொடர்ந்து உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. அவர்களை எதிர்த்து உக்ரைன் வீரர்களும் போரிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கிவ் நகருக்கு அருகே சோலாமியன்ஸ்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு மீது இன்று ரஷியா ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த அடுக்குமாடிக்குடியிருப்பின் மேல்தளம் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்துள்ளனர்.
 

Leave a Reply