• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விசேட சுற்றிவளைப்பில் இதுவரை 10 ஆயிரம் பேர் கைது

இலங்கை

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஆயிரத்து 865 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியாக கடந்த ஒருவார காலமாக பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை 134 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளதுடன்
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 154 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த ஒரு வாரகாலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றி வளைப்புக்களில் மொத்தமாக 10 ஆயிரத்து 456 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
 

Leave a Reply