• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஐரோப்பாவை போல் காட்சியளிக்கும் நுவரெலியா

இலங்கை

இலங்கையின் நுவரெலியாவில் பல பகுதிகளில் நேற்றைய தினம் (22.12.2023) அதிகாலை பூ பனி பெய்துள்ளது.

நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதத்தில் பூ பனி பொழிவு காணப்படும் நிலையில், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நுவரெலியா நகரிலுள்ள பூங்கா, தேயிலைத் தோட்டங்களில் பூ பனி பொழிவு காணப்பட்டது.

மேலும் இன்று அதிகாலை நுவரெலியாவின் வெப்ப நிலை 14 பாகை செல்சியஸாக காணப்பட்டதால் அதிகம் குளிரான நிலையை மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

இதேவேளை பூ பனி பொழிவால் நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகள் ஐரோப்பாவை போல் காட்சியளிக்கின்றது.
 

Leave a Reply