• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தாலும் செல்வேன் - கூச்சமின்றி கூறிய ரேகா நாயர்

சினிமா

நடிகை ரேகா நாயர் சமீபத்திய பேட்டி ஒன்று கலந்து கொண்டார். அதில் தொகுப்பாளினாக நடிகை ஷகிலா அமர்ந்திருந்தார். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து ரேகா நாயரிடம் கேள்வி எழுப்பினார் நடிகை ஷகிலா. அதற்கு பதில் அளித்த நடிகை ரேகா நாயர், பட வாய்ப்புக்காக ஒருவன் படுக்கைக்கு அழைக்கிறான் என்றால் அந்த நடிகைக்கு பிடித்திருந்தால் செல்கிறார். பிடிக்காவிட்டால் செல்ல மாட்டார்.
  
ஆனால், பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து விட்டு ஒரு பத்து வருடங்கள் கழித்து என்னை அந்த இயக்குனர் அழைத்தார்.. இந்த இயக்குனர் அழைத்தார்.. என்று கூறிக் கொண்டிருப்பதெல்லாம் எதற்காக என்று எனக்கு தெரியவில்லை.

ஒருவேளை என்னை யாராவது பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் எனக்கு அந்த நபரை பிடித்திருந்தால் கண்டிப்பாக நான் செல்வேன்.

விரலை வாயில் வைத்துக் கொண்டு இருக்க மாட்டேன். இதுபோலத்தான் நடிகைகள் அவர்களுடைய சம்மதத்தின் பேரில் தான் இப்படி எல்லாம் நடக்கிறது.

யாரும் வற்புறுத்தியோ.. கட்டாயப்படுத்தியோ.. செய்வது கிடையாது. பட வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கைக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

விருப்பம் இருப்பவர்கள் போகிறார்கள் இல்லாதவர்கள் விட்டுவிடுகிறார்கள் பட வாய்ப்புக்காக படுக்கையையும் பகிர்ந்து விட்டு ஒரு பத்து வருடங்கள் கழித்து என்னை அந்த இயக்குனர் இப்படி செய்தார் இவர் அப்படி செய்தார் என்று கூறுவதெல்லாம் சரி கிடையாது என பேசியிருக்கிறார் ரேகா நாயர்.

இவருடைய இந்த பேச்சுக்கு இணைய பக்கங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளது. 
 

Leave a Reply