• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டில் நான்கு பில்லியனுக்கும் அதிகமான கையிருப்பு

இலங்கை

இந்த ஆண்டின் இறுதியில் நாட்டில் அதிகாரப்பூர்வ கையிருப்பு நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை விட அதிகமாக காணப்படும் என்றும் இது இந்த வருடத்தில் எதிர்பார்க்கப்பட்ட தொகையை விட அதிகமாகும் என்றும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு அந்நிய செலாவணி வரவால் மொத்த கையிருப்பு கணிசமாக வலுப்பெற்றுள்ளதுடன் இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் அரசாங்கம் 787 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியைப் பெற்றுள்ளதாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 337 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்களும், உலக வங்கியிடமிருந்து 250 மில்லியன் அமெரிக்க டொலர்களும் டிசம்பர் மாதத்தில் அரசாங்கம் இரண்டாவது தவணையாகப் பெற்றுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தை வலுப்படுத்துவதும் நாட்டின் வெளி கையிருப்புகளை மேம்படுத்துவதும் அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.;
 

Leave a Reply