• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில். கத்தரிக்காய் திருடிய இளைஞன் கைது

இலங்கை

யாழில்  சுமார் 300 கிலோ கிராம் கத்தரிக்காயைத்  திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் கடந்த 7 ஆம் திகதி   கோப்பாய் மத்திய பகுதியில் உள்ள கத்தரி தோட்டம் ஒன்றில் இருந்து  பெரும் தொகையான கத்தரிக்காய்களைத் திருடியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தோட்டத்தின் உரிமையாளர்  கோப்பாய் பொலிஸாருக்கு அளித்த  முறைப்பாடிற்கு அமைய விசாரணைகளைப்  முன்னெடுத்த பொலிஸார் திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியை சேர்ந்த 20 வயதா – இளைஞனை நேற்றைய தினம்  கைது செய்துள்ளனர்.
 

Leave a Reply