• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மட்டக்களப்பில் கடலில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

இலங்கை

மட்டக்களப்பு, புன்னக்குடா கடலில் நீராடச் சென்ற  15 வயதான சிறுவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

நேற்று முன்தினம்(28) நண்பர்களுடன் நீராடச்சென்ற செங்கலடியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

இந்நிலையில் சிறுவனின் சடலம் இன்று மாலை 7.00 மணியளவில் கடலில் மிதந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டு மட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply