• Welcome to TamilsGuide
செய்திகள் 1

13ஆவது திருத்த சட்டமே தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கும்

இலங்கை

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினால் மாத்திரமே தமிழ் மக்கள் உரிமை உள்ளவர்களாக இந்த நாட்டில் வாழ முடியும் என்பதில் தேசிய மக்கள் சக்தி திடமாக உள்ளது என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட இணைப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்தார்.

யாழில் உள்ள அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டினுடைய தேசிய பிரச்சினை என்பது 75 வருடங்களாக இருக்கின்ற என்றும் குறித்த பிரச்சினைக்கு நாட்டினுடைய ஆட்சியாளர்கள் தான் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே நிலைக்கக்கூடிய நிரந்தரமான தீர்வுக்காக புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும் வரைக்கும் இந்த மாகாண சபையினை தொடர்ந்து பேண வேண்டும் என்பது எமது நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.
 

Leave a Reply