• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இடைக்காலக் கட்டுப்பாட்டுக் குழு விவகாரம் - மேலதிக விசாரணைகள் ஒத்திவைப்பு

இலங்கை

இலங்கை கிரிக்கட் சபையின் இடைக்கால கட்டுப்பாட்டு குழு தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக விசாரணை நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் நியமனத்துக்கு எதிராக கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழங்கு இன்று வரையில் ஒத்திவைக்க்பபட்டது.

நேற்றைய தினம் சோபித ராஜகருணா மற்றும் டி.என். சமரகோன் ஆகியோரின் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்ட நிலையில், இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதற்கமைவாக குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் மீள் பரிசீலனைக்கு அழைக்கப்பட்ட நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மிலிந்த குணதிலக உண்மைகளை முன்வைத்தார்.

அதனையடுத்து, மேலதிக வழக்குகளை தாக்கல் செய்வது நாளை வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply