• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மின்சார வேலியில் சிக்குண்ட கொம்பன் உயிரிழப்பு

இலங்கை

முல்லைத்தீவு, ஒட்டி சுட்டான் பெரிய சாளம்பன் கிராமத்தில், மின்சார வேலியில் சிக்குண்டு கொம்பன் யானையொன்று நேற்று உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் ,சுமார் 15 வயது மதிக்கத்தக்க யனையே இவ்வாறு உயிரிழந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்சார வேலையினை இணைப்புச் செய்த காணியின் உரிமையாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும், இது குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சாளம்பன் கிராமத்தில் காட்டு யானையினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், யானையால் உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், மக்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply