• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாவீரர்களுக்கு கௌரவம்

இலங்கை

யாழில் மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டொன்று மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் நேற்று (21) திறந்து வைக்கப்பட்டது.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்றைய தினம் ஆரம்பமானது.

இதனையொட்டி  யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட குறித்த  கல்வெட்டானது மாலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ச்சியாக சிறுவர் சிறுமியர்களால் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்லறை திரைநீக்கம் செய்யப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர், முன்னாள் போராளிகள், சிறுவர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 

Leave a Reply