• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடா எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் மூன்று நூல்களின் வெளியீடு

கனடா

கனடா: எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் மூன்று நூல்களின் வெளியீடும், உரையாற்றியவர்களும் & சிறப்புப் பிரதிகள் பெற்றவர்களும் பற்றிய குறிப்பு!   - வ.ந.கிரிதரன் -
நேற்று,  நவம்பர் 19,  எனது மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில் சிறப்புரை ஆற்றியவர்கள், சிறப்புப் பிரதிகள் பெற்று நிகழ்வுக்குச் சிறப்புச் சேர்த்தவர்கள், வருகை தந்தவர்கள்  இவர்கள். இவர்களது வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.  
இந்நிகழ்வுக்குத் தலைமையேற்று மிகவும் சிறப்பாக நெறிப்படுத்தினார் நண்பர் பா.அ.ஜயகரன். அவருக்கும் நிகழ்வுக்கு மிகவும் உறுதுணையாக விளங்கிய தேடகம் அமைப்புக்கும் மனங்கனிந்த நன்றி. கூடவே நிகழ்வுக்கு வருகை தந்து ஆதரித்த அனைவருக்கும் நன்றி. 
நிகழ்வுக் காணொளியைப் ஓளிப்பதிவு செய்தமைக்கும், புகைப்படங்கள் எடுத்ததற்கும்  தடயம் நிறுவனத்துக்கும், அதன் ஸதாபகர் கிருபா கந்தையாவுக்கும், நிகழ்வைப் புகைப்படங்களில் ஆவணப்பதிவாக்கிய நண்பர் அலெக்ஸுக்கும் நன்றி. 
அழைப்பையேற்று வருகை தந்த அனைவருக்கும் மீண்டும் என்  மனம் நிறைந்த நன்றி.
நிகழ்வில் நூல்கள் பற்றிய அறிமுக உரையினை ஆற்றியவர்கள்:
எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம்
எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் சிறுகதை, கவிதை, திறனாய்வு  மற்றும் இதழியல் என இவரது இலக்கியப் பங்களிப்பு பரந்து  பட்டது. இலங்கையில் வெளியான முக்கியமான  சிற்றிதழ்களில் ஒன்று 'பூரணி' . அதன் இணையாசிரியர்களில் ஒருவர். ஆங்கிலப் புலமை மிக்கவர்.  நைஜீரியாவில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்திருக்கின்றார்.  . சின்னுவ அச்சிப்பேயின்  புகழ்பெற்ற நாவலான Things Fall Apart நாவலை  'சிதைவுகள்' என்னும் பெயரில் மொழிபெயர்த்தவர்.  இன்னுமொரு நாவலான  'No Longer at Ease' 'வீழ்ச்சி' என்னும் பெயரில் இவரது மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. இவரது மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்  'இரவில் நான் உன் குதிரை'  , 'ஆடும் குதிரை'  என்னும் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.   மு.தளையசிங்கத்தின் 'ஒரு தனி வீடு' நாவலை ஆங்கிலத்தில் 'A Separate Home' என்னும் பெயரில் மொழிபெயர்த்திருக்கின்றார். 'தாய்வீடு' பத்திரிகையில் தொடர்ச்சியாக இவரது  மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் வெளிவருகின்றன.  உள்ளோலி என்னும் கவிதைத்தொகுப்பும், தியானம் என்னும் சிறுகதைத்தொகுப்பும் வெளியான ஏனைய நூல்கள்.

இவர் உடல் நிலை காரணமாக நிகழ்வுக்கு வர முடியவில்லை. இவர் 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' பற்றி எழுதிய விமர்சனக் குறிப்பினை நிகழ்வுக்குத்  தலைமை வகித்த எழுத்தாளர் பா.அ.ஜயகரன் வாசித்தார்.
எழுத்தாளர் அருண்மொழிவர்மன்
எழுத்தாளர் அருண்மொழிவர்மன் (சுதர்சன்ஸ்ரீநிவாசன்) முக்கியமான கனடியத்தமிழ் எழுத்தாளர்.  அண்மையில் வடலி பதிப்பக வெளியீடாக வெளிவந்த  'தாயகக் கனவுகள்'  ஈழப்போராட்டம், அது பற்றிய நூல்கள்,  அவை பற்றிய வாசிப்பு அனுபவங்களை உள்ளடக்கிய   இவரது கட்டுரைகளின் தொகுப்பு. தொடர்ச்சியாகப் பல்வேறு புகலிட, தாயகப்  பத்திரிகைகள், சஞ்சிகைகளில்  இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. 'சுயமரியாதை, சமத்துவம் என்பதே சமூகநீதிக்கான பயணம் என்கிற பயணத்தில்..' என்னும் தாரக மந்திரத்துடன் வெளிவரும் இவரது 'அருண்மொழிவர்மன் பக்கங்கள்' என்னும் வலைப்பதிவு முக்கியமான வலைப்பதிவுகளில் ஒன்று.
சமூக, அரசியற் செயற்பாட்டாளர்  முருகுப்பிள்ளை
இலங்கைத்தமிழர் போராட்ட வரலாற்றில் எண்பதுகளில் இளைஞர்கள் பலர் ஆயுதமேந்திப்போராட்டத்தில் இணைந்தனர். அவர்களில் ஒருவர் இவர். யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானத்தில் இளமானிப் பட்டம் பெற்றவர். தற்போது தகவற் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகின்றார். சமூக, அரசியற் செயற்பாட்டாளரான இவரது இயற்பெயர் ஈஸ்வரமூர்த்தி. இலக்கியம், சமூகம், இலங்கைத்தமிழர், உபகண்ட மற்றும் சர்வதேச அரசியல் பற்றி இவர் எழுதும் கட்டுரைகள், முகநூற் பதிவுகள் முக்கியமானவை.  இவரது முகநூற் பதிவுகள் ஊடகங்கள் பலவற்றில் மீள்பிரசுரமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தான் கூறும் விடயத்தில் ஆழ்ந்த அறிவும், தெளிவான பார்வையும்  மிக்கவர் என்பதை இவரது எழுத்துகள் புலப்படுத்தும். முரண்பட்ட கருத்துகளையும் இவருடன் நட்புரீதியாகத் தர்க்கிக்கலாம்.
நிகழ்வில் சிறப்புப் பிரதிகள் பெற்றவர்கள்:
1. 
தேவகாந்தன்
எழுத்தாளர் தேவகாந்தன்  இலங்கையில் இருந்த காலகட்டத்தில் எழுதத்தொடங்கி , புகலிடத்திலும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்.  இலங்கை, இந்தியா, புகலிடத் தமிழ் ஊடகங்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.  இவரது மகா நாவலான 'கனவுச்சுறை' , ஐந்து பாகங்களை உள்ளடக்கியது.  அதன் இரு  பாகங்கள் அண்மையில் ஆங்கிலத்தில் டொட்ரிகோ வால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானதுடன் , பரவலான வரவேற்பையும் பெற்றுள்ளது. நாவல், சிறுகதை, இலக்கியத் திறனாய்வு , இதழியல்,  திரைப்படம், தொலைக்காட்சி என இவரது இலக்கியப் பங்களிப்பு பன்முகப்பட்டது.  இதுவரை 17 நாவல்கள், 4 சிறுகதைத்தொகுப்புகள் உட்படப் பல நூல்கள் வெளிவந்துள்ளன.  இலக்கு என்னும் சஞ்சிகையை நடத்தியவர். கூர் என்னும்  இலக்கிய ஆண்டிதழை வெளியிட்டவர். பதிவுகள் இணைய இதழின் ஆரம்பத்திலிருந்து அதில் எழுதி  வரும் எழுத்தாளர்களில் ஒருவர்.  'பதிவுகள்' இணைய இதழில் இவரது 'வடலி'அமைப்பாக வெளியான 'கலிங்கு' நாவல் தொடராக வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.
திருப்பூர்த் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது, தமிழ் நாட்டு தமிழ் வளர்ச்சித்துறை விருது, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது, தமிழர் தகவல் விருது, கனடாத் தமிழ் எழுத்தாளர் இணைய விருது எனப் பல விருதுகளைப் பெற்றவர். தேவகாந்தன் பழகுவதற்கு இனிய நண்பர்களில் ஒருவர். 
கட்டுரையை முழுமையாக வாசிக்க : https://www.geotamil.com/.../202.../8261-2023-11-20-14-45-11
 

 

Leave a Reply