வெற்றி நிகழ்வு
சினிமா
முனைவர் வெற்றிவேல் சண்முகம்,அவர்கள் தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் காலம் இதழ்களை ஆய்வு செய்து முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார். முனைவர் தகுதிக்கான அவர் சமர்ப்பித்த ஆய்வேடு, நூலாக நேற்று ரொரண்டோவில் வெளியீடு செய்யப் பெற்றது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக பேராசிரியரும் தமிழ்த் துறைத் தலைவருமான N.ஸ்டீபன் G அவர்கள் அந்நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் கனடாவில் வாழ்ந்துவரும் பேராசிரியர்களான பேராசிரியர் திருமதி பார்வதி கந்தசாமி, பேரசிரியர் நா.கெளசல்யா, பேரசிரியர் திரு. நா.சுப்ரமணியன், பேராசிரியர் இ.பாலசுந்தரம் பேரசிரியர் ம.சின்னத்தம்பி ஆகியோர் கலந்துகொண்டு வெளியீட்டை சிறப்பித்தார்கள்