• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தினேஷ் ஷாஃப்டரின் ஆயுள் காப்புறுதி குறித்து நீதிமன்றத்தின் தீர்ப்பு

இலங்கை

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சார்பாக அவரின் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய ஆயுள் காப்புறுதி பலன்களை ஒரு வாரத்துக்கு இடைநிறுத்துமாறு இரண்டு காப்புறுதி நிறுவனங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவு நீதிமன்றத்தால் தளர்த்தப்பட்டுள்ளது.

குறித்த தரப்பினருக்கான காப்புறுதி கொடுப்பனவை நிறுத்த வேண்டிய தேவைப்பாடு தொடர்ந்தும் இல்லையென கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்ரா ஜயசூரிய நேற்று அறிவித்துள்ளார்.

அத்துடன் நட்டயீட்டை பெற்றுக் கொள்ள சில தரப்பினர் முயற்சிப்பது குறித்து எந்தவித ஆதாரங்களும் கிடைக்கப்பெறவில்லை எனவும் நீதவான் அறிவித்துள்ளார்.
 

Leave a Reply