• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மற்றொரு நீதிபதியும் கிரிக்கெட் வழக்கிலிருந்து விலகல்

இலங்கை

கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டுச் சபைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிப்பதில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நீல் இத்தவெலவும் விலகியுள்ளார்.

இன்று காலை, இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான டி.என்.சமரகோன் மற்றும் நீல் இத்தவெல ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக நீதியரசர் நீல் இத்தவெல அறிவித்த நிலையில் இந்த வழக்கில் இருந்து இதுவரை 3 நீதியரசர்கள் விலகியுள்ளனர்.

இந்த மனுவை பரிசீலிக்கும் புதிய நீதியரசர்கள் அமர்வுக்கு நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் டி.என்.சமரக்கோன் ஆகியோர் பெயரிடப்பட்டனர்.

இந்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் புதிய நீதியரசர்கள் குழுவின் முன்னிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரம் குறித்து பரிசீலனை இடம்பெறவுள்ளது.
 

Leave a Reply