• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்த தபால் ஊழியர்கள்

இலங்கை

தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சி செய்வதாகத் தெரிவித்து  ஒன்றிணைந்த தபால் முன்னணியால் இரண்டு நாட்கள்  அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் உள்ள பிரசித்திபெற்ற தபால் நிலையத்தை தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக  வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்றைய தினம்  தெரிவித்திருந்த நிலையிலேயே குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், நவம்பர் 8, 9, 10 ஆகிய மூன்று நாட்களில் அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையையும் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply