• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பு துறைமுகத்தில் 553 மில்லியன் டொலர் முதலீடு

இலங்கை

கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல் போக்குவரத்து கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 500 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனம் (னுகுஊ) இன்று (08) அறிவித்துள்ளது.

உயர்தர உள்கட்டமைப்புக்கான நிதியுதவியை வழங்குவதில் னுகுஊ இன் அர்ப்பணிப்பு இந்த புதிய முனையத்தின் மூலம் பிரதிபலிக்கிறது என்று நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த முதலீடு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் இந்தியா உட்பட அதன் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்புக்கான அமெரிக்காவின் நிலையான அர்ப்பணிப்பை மேலும் எடுத்துக்காட்டுகிறது.

அதன்படி, கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள ஆழமான நீர் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு உதவுவதற்காக கொழும்பு வெஸ்ட் இன்டர்நேஷனல் டெர்மினல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 553 டொலர் மில்லியன் நிதியுதவியை அறிவிப்பதற்காக னுகுஊ பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ஸ்கொட் நாதன் இலங்கை வந்தடைந்துள்ளார்.
 

Leave a Reply