• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அனைத்து ஊழல் மோசடிகளையும் வெளிப்படுத்துவேன் - அமைச்சர் ரொஷான் ரணசிங்க

இலங்கை

கிரிக்கெட் நிர்வாக சபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே புதிய குழு அமைக்கப்பட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று நாம் கிரிக்கெட் நிர்வாக சபையை இடைநிறுத்தி, புதிய குழுவொன்றை சிறிது காலத்திற்கு நியமித்திருந்தோம்.

தற்போது இந்தக்குழுவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற 20-20 போட்டித் தொடரில் நேர்ந்த, ஊழல் மோசடிகள் தொடர்பாக சட்டநடவடிக்கை எடுக்குமாறு கணக்காய்வாளரினால் குறிப்பிடப்பட்டமைக்கு இணங்கவே, நாம் இந்தக் குழவை நியமித்திருந்தோம்.

இன்று இந்தக் குழுவுக்கே தற்போது நிதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இதன்ஊடாக, மீண்டும் ஊழல்வாதிகள் இன்று முதல் பணியில் இணைந்துக் கொள்வார்கள்.

இந்நாட்டு மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், கிரிக்கெட் நிர்வாகக் குழுவை மாற்ற வேண்டும் என கோரியமைக்கு இணங்கத்தான் நான், இந்த மாற்றங்களை செய்திருந்தேன்.

இந்த நிலையில், நாளைய தினம் நான் கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற அனைத்து ஊழல் – மோசடிகள் தொடர்பாகவும் விசேட உரையாற்றவுள்ளேன்” என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply