• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அம்பாறையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு

இலங்கை

அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பாறை, பண்டாரதூவ, மாயாதுன்ன பிரதேசத்தில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியின் ஊடாகவே இந்த பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே உயிரிழந்துள்ளார்.

இவர், தனது வீட்டில் வீட்டின் பின்புறம் குளித்துக் கொண்டிருந்த போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வயற்காணி தொடர்பாக ஏற்பட்ட தகராறே துப்பாக்கி பிரயோகத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

மரணம் தொடர்பான நீதவான் விசாரணையைத் தொடர்ந்து பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்ய உகன, பண்டாரதுவ பொலிஸார் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
 

Leave a Reply