• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொப் மார்லி கைது

இலங்கை

பாரியளவில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த பொப் மார்லி என்றழைக்கப்படும் சமிந்த தப்ரு உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஓபத்த பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத்  தகவலையடுத்தே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு பேருவளை கடற்கரையில் சுமார் 300 கோடி ரூபாய் பெறுமதி வாய்ந்த ஹெரோயின் கைப்பற்றப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பொப் மார்லி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட பொப் மாலி உள்ளிட்ட சந்தேகநபர்கள் நால்வரும் இன்று உடுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply