• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சி மாவட்டத்தில் உணவுப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார உதவித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

இலங்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்து செயற்படுத்தப்படும் உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார உதவித்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று(01) நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 10 மணிக்கு இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக எடுத்துரைத்திருந்தார்.

திட்டம் தொடர்பான அறிமுகத்தினைத் தொடர்ந்து, துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் குறித்த திட்ட உள்ளடக்கங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், உள்ளிட்ட துறைசார்ந்த பல திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்
 

Leave a Reply