• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காசா எல்லையின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் தாக்குதல் - 50 பேர் பலி

காசா எல்லையில் அமைக்கப்பட்டு இருந்த அகதிகள் முகாமில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "காசா எல்லை பகுதியின் வடக்கு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த முகாம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 150-க்கும் அதிகமானோர் காயமுற்றனர். இஸ்ரேல் இந்த தாக்குதல் மூலம் அதிக குடியிருப்புகள் உள்ள பகுதியை குறிவைத்து இருக்கிறது," என்று தெரிவித்து உள்ளது.

இந்த தாக்குதல் குறித்து வெளியான வீடியோவில் இடிந்து விழுந்த குடியிருப்பு பகுதிகளின் இடிபாடுகளில் இருந்து உயிரிழந்தோர் சடலங்கள் மீட்கப்படும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. மீட்பு பணிகள் நடைபெறும் பகுதியில் பலர் ஒன்றுகூடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஹமாஸ் தெரிவித்து இருக்கும் இந்த குற்றச்சாட்டு குறித்து இஸ்ரேல் தரப்பில் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை.
 

Leave a Reply