• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மக்கள் சனத்தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்

இலங்கை

பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீடமைப்புக் கணக்கெடுப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட முதல் கட்டிடமாக ஜனாதிபதி செயலகம் பட்டியலிடப்பட்டுள்ளது.

தரவு சேகரிப்புக்கு அச்சிடப்பட்ட ஆவணங்களுடன் டெப்லெட்டுகளைப் பயன்படுத்துவதே இவ்வருட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் சிறப்பான அம்சமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இறுதியாக 2012 ஆம் ஆண்டு மக்கள் சனத்தொகை கணக்கிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply