• Welcome to TamilsGuide
செய்திகள் 1

33 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட ஆலயத்தில் பாலஸ்தானம்

இலங்கை

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய பாலாலைய கும்பாபிஷேகம் நேற்று(26) இடம்பெற்றது.

குறித்த ஆலயமானது கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் இருந்த நிலையில், கடந்த ஜூன் மாத கால பகுதியில் ஆலய சூழலையும் , அதனை அண்டிய சில பிரதேசங்களில் இருந்தும் இராணுவத்தினர் வெளியேறியிருந்தனர்.

இந்நிலையிலேயே ஆலய புனரமைப்பு வேலைகளை முன்னெடுக்கும் முகமாக பாலஸ்தாபன நிகழ்வு நேற்று  இடம்பெற்றது.
 

Leave a Reply