• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மட்டக்களப்பில் காயங்களுடன் கரையொதுங்கிய டொல்பின்கள்

இலங்கை

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காயாங்கேணி கடற் பகுதியில் காயங்களுடன் 7 டொல்பின்கள் கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து அப்பகுதி மீனவர்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ள நிலையில் அங்கு வந்த அதிகாரிகள் குறித்த டொல்பின்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த 7டொல்பின்களும் நேற்று மீண்டும் கடலுக்குள் விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply