• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட மூவர் கைது

இலங்கை

ரம்புக்கனை திஸ்மல்பொல பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாரம்பெத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த ஒருவரை கைது செய்யச் சென்ற போது, சந்தேக நபர்கள் குறித்த அதிகாரிகளை தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த அதிகாரிகள் இருவரும் ரம்புக்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரையும் மேலும் இருவரையும் ரம்புக்கனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 

Leave a Reply