• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லெபனான் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கைப் பெண்

இலங்கை

போலி முகவரொருவர் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்குச்  செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த வயது முதிர்ந்த பெண்ணொருவர் லெபனான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வேலணைப்  பகுதியைச்  சேர்ந்த 64 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தமது தாயாரை உடனடியாக  மீட்டுத்தருமாறு அவரது பிள்ளைகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து அவர்கள்  ஊடகங்களில் தெரிவித்துள்ளதாவது ”எமது  தாயார் பிரான்ஸில் வசிக்கும் தனது சகோதரர்களின் குடும்பத்துடன் வசிப்பதற்காக விசாவிற்கு விண்ணப்பித்திருந்தார். எனினும் விசா கிடைக்காத காரணத்தினால் முகவர் ஊடாக செல்ல முயன்றார்.

அதற்காக முகவர் ஒருவருக்கு 20 இலட்சம் ரூபாய் பணம் முதல் கட்டமாக வழங்கியிருந்தார். இதனை அடுத்து கடந்த ஜூன் மாதம் இலங்கையில் இருந்து புறப்பட்ட நிலையில் , மத்திய கிழக்கு நாடுகள் சிலவற்றுக்குச்  சென்று, பின்னர் லெபனான் சென்று பிரான்ஸ் செல்ல முற்பட்ட வேளையில் லெபனான் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply