• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சாரதி அனுமதிப்பத்திரம் குறித்த அதிரடி அறிவிப்பு

இலங்கை

அனுராதபுரம் மாவட்ட காரியாலயத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் செயற்பாடு இன்றும் (16) நாளையும் (17) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அலுவலகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் காரணத்தினாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த இரு தினங்களில் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான முன்பதிவை மேற்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் விரும்பும் மற்றுமொரு நாளில் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply